கடாய் பன்னீர் மசாலா (Kadai Panner Recepie)
சுலபமான முறையில் ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
வதக்கி அரைக்க:
எண்ணெய் : 2 தேக்கரண்டி
வெங்காயம்:1(நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி : 2
மல்லித் தூள் :1 தேக்கரண்டி
சீரகத் தூள் : 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் :1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் :1 1/2 தேக்கரண்டி
வெங்காயம்:1(நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி : 2
மல்லித் தூள் :1 தேக்கரண்டி
சீரகத் தூள் : 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் :1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் :1 1/2 தேக்கரண்டி
தாளிக்க :
வெண்ணெய்:சிறிதளவு
கொத்தமல்லி விதை: 2 (அ) 3
பச்சை மிளகாய்:1(சிறிதாக நறுக்கியது )
இஞ்சி/பூண்டு விழுது: சிறிதளவு
பச்சை குடைமிளகாய் :சிறிதளவு
மஞ்சள் குடைமிளகாய்:சிறிதளவு
வெங்காயம் :சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
பன்னீர் :150 (அ) 200 கிராம்
கொத்தமல்லி தழை: சிறிதளவு
கொத்தமல்லி விதை: 2 (அ) 3
பச்சை மிளகாய்:1(சிறிதாக நறுக்கியது )
இஞ்சி/பூண்டு விழுது: சிறிதளவு
பச்சை குடைமிளகாய் :சிறிதளவு
மஞ்சள் குடைமிளகாய்:சிறிதளவு
வெங்காயம் :சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
பன்னீர் :150 (அ) 200 கிராம்
கொத்தமல்லி தழை: சிறிதளவு
செய்முறை:
■ அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்,வெங்காயம் பொன் நிறமானதும் தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மூடி விடவும்.
■ இரண்டு நிமிடம் கழித்து தக்காளி நன்கு வதங்கி அதன் பச்சை வாசனை போன பின்னர் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
■ ஒரு தேக்கரண்டி மல்லித் தூள், ஒரு தேக்கரண்டி சீரகத் தூள்,ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்,ஒன்றரை தேக்கரண்டி மிளகாய் தூள் (உங்களுக்கு தேவையான அளவு காரம் சேர்த்துக் கொள்ளலாம்)சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
■ பின்னர் வதக்கி வைத்த வெங்காயம் தக்காளி சிறிது ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
■ பிறகு அடுப்பில் கடாயை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் கால் தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சிறிதளவு கொத்தமல்லி விதையை(தட்டியது) அதில் போடவும்,அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
■ இவற்றின் பச்சை வாசனை நீங்கியதும் பச்சை குடைமிளகாய்,மஞ்சள் குடைமிளகாய் மற்றும் அரை பெரிய வெங்காயம் ஆகியவற்றை சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும்.
■ குடைமிளகாய்,வெங்காயம் பாதி வதக்கினால் போதும் முழுவதும் வதக்க வேண்டாம் அதனால் ஒரு நிமிடம் அதிக அனலில் வைத்து வதக்கி விடவும்.
■ பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
■ இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 6 முதல் 7 நிமிடம் வரை கொதிக்க விடவும்.இதன் பச்சை வாசனை நீங்கியதும் எடுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கடாய் பன்னீர் மசாலா தயார்.
■ இதனை ரொட்டி ,நான் ,பரோட்டா,
சப்பாத்தி, புலாவ் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
சப்பாத்தி, புலாவ் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
குறிப்பு :
தினமும் பயன்படுத்தும் மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்தால் நல்ல நிறத்துடன் வரும்.
பன்னீர் துண்டுகளை நேரடியாக உபயோகிக்காமல் அதனை தோசைக் கல்லில் போட்டு சிறிது வறுத்து சிவப்பு நிறமானதும் அதனை எடுத்து இக்கலவையில் சேர்த்தும் சமைக்கலாம்.
Comments
Post a Comment